
கொழும்பு, மார்ச் 28
இலங்கை – இந்திய கடற்படையினர் இணைந்து இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் ஆரம்பித்துள்ள விசேட கூட்டு கடற்படை பயிற்சி நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடையவுள்ளன.
வெவ்வேறு வேகத்தில் விமானங்களில் உலங்கு வானுார்திகளை தரையிறக்குதல், மீண்டும் ஏவுதல் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளின் போது விமானம் தாங்கி கப்பல்களுக்கு இடையே செய்திகளை பரிமாறிக்கொள்வது போன்ற நடைமுறை பயிற்சிகள் இங்கு நடத்தப்பட்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதில் இந்திய, இலங்கை கடற்படைகளுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதை இந்த கூட்டு கடற்படைப் பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.