பால்மா தட்டுப்பாடு – அநாதை இல்லங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்கள் கடும் பாதிப்பு

பால் மா தட்டுப்பாடு காரணமாக சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வரும் சிறுவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி தேநீர் குவளைக்குள் சிக்குண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் 1 வயது முதல் 6 வயது வரையிலான சிறார்களுக்கு அத்தியாவசிய உணவாக பால் மா வழங்கப்பட்ட போதிலும், கடுமையான பால் மா தட்டுப்பாடு காரணமாக தமது நிர்வாகிகளால் அதனை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

நாட்டில் 379 நன்னடத்தை இல்லங்கள் உள்ளன, மேலும் 44 அநாதை இல்லங்கள் மாகாண நன்னடத்தை ஆணையாளரால் நடத்தப்படுகின்றன, மீதமுள்ளவை மாகாண ஆணையாளரின் மேற்பார்வையின் கீழ் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் இல்லங்களால் நடத்தப்படுகின்றன.

சிறுவர் இல்லங்களில் சிறுவர்கள் எதிர்நோக்கும் இந்த நெருக்கடி தொடர்பில் நன்னடத்தை திணைக்களத்தின் ஆணையாளர் சுதிர நிலங்க தெரிவிக்கையில், ​​

குறிப்பிட்ட சில மாகாணங்களில் இவ்வாறான பிரச்சினைகள் இருக்கக் கூடும். ஊவா மாகாணத்தில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றிற்கு பால் மாவை வழங்க தானும் தலையிட்டதாகவும் தெரிவித்தார்.

ஏனைய மாகாணங்களில் இவ்வாறான பிரச்சினைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட மாகாணத்தின் ஆணையாளருடன் கலந்துரையாடி தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் இல்லை என்றால் 011-2186062 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு நன்னடத்தை திணைக்கள ஆணையாளருக்கு அறிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, புனர்வாழ்வு நிலையங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களையும் இந்தப் பிரச்சினை கடுமையாக பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *