
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், மீனவர்களின் விவகாரங்கள் குறித்து அவருடன் பேசினார்.
வடபகுதியில் உள்ளவை உட்பட பல்வேறு மீன்பிடி துறைமுகங்களின் அபிவிருத்திக்காக கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை குறித்து இதன்போது சாதகமான நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.
தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுதல் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் இவ்விவகாரத்தைக் கையாள்வதற்காக அண்மையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும் என இருவரும் கருத்து வெளியிட்டனர்.