நாட்டு மக்களுக்கு நிதியமைச்சரின் மகிழ்ச்சியான செய்தி

கொழும்பு, மார்ச் 29

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் மத்தியில் சில பொருட்களின் விலையை மேலும் அதிகரிக்காதிருப்பதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மின் கட்டணங்கள், எரிவாயு விலைகள், எரிபொருள் விலைகளை தற்சமயம் அதிகரிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அமைச்சரவைக்கு இது தொடர்பில் உறுதியளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தனியார் எரிவாயு நிறுவனமொன்று தனது எரிவாயு சிலிண்டர்களின் விலையை 4 ஆயிரத்து 199 ரூபாவாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *