நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மன்னார் மாவட்டத்தில் மீன் பிடி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட கருவாடு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான மண்ணென்னை உரிய விதத்தில் தேவையான அளவு கிடைக்க பெறாமையினால் மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது பாதிக்கப்பட்டு வருகின்றனர்
அதே நேரம் நீண்ட வரிசையில் நின்று மட்டுப்படுத்தபட்ட அளவிலேயே மண்ணென்னை கொள்வனவு செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது
மீன் பிடி இன்மையால் மீன்களின் விலை அதிகரித்துள்ளனையினால் கருவாடு உற்பத்தி பெரிது பாதிக்கப்பட்டுள்ளதுடன் கருவாடுகளின் விலைகளும் அதிகரித்துள்ளது
இதன் காரணமாக மக்கள் தற்போது கருவாடுகளை கூட கொள்வனவு செய்ய முடியாத நிலை நிலவி வருகின்றது
கடந்த மாதம் 900 ரூபா விற்பனை செய்யப்பட்ட நெத்தலி கருவாடு தற்போது 1150 ரூபாயாகவும், கடந்த மாதம் 1100 ரூபா விற்பனை செய்யப்பட்ட கட்டா 1350 ரூபாயாகவும் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது.

