
யாழ்ப்பாணத்தில் 3 தீவுகளின் கலப்பு மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கும் திட்டத்தை இந்தியா நடைமுறைப்படுத்த உள்ளது.
இதற்கான ஒப்பந்தம் நேற்று இலங்கை – இந்தியா இடையே கைச்சாத்தானது.
முதலில் சீனாவிடம் இந்த மின் உற்பத்தித் திட்டத்தை வழங்க இலங்கை முடிவு செய்தபோதும் பின்னர் இந்தியாவின் கடும் எதிர்ப்பு காரணமாக இது கைவிடப்பட்டது.
இந்நிலையில் இந்திய இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் முன்னிலையில் யாழ்ப்பாண தீவுகளில் கலப்பு மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
அத்துடன், இந்தியாவின் மானிய உதவியுடன் இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள (SL-UDI) திட்டத்தை செயல்படுத்துவது, கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்ததம் மற்றும் மின்பிடித் துறைமுகங்களின் புனரமைப்பு உள்ளிட்ட 7 ஒப்பந்தங்கள் இலங்கை – இந்தியா இடையே நேற்று கையெழுதாகின.