
கொழும்பு, மார்ச் 29
பிம்ஸ்டெக் (BIMSTEC) உறுப்பு நாடுகளின் வௌிவிவகார அமைச்சர்களுக்கான கூட்டம் இன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கையில் இடம்பெறும் BIMSTEC மாநாட்டில் இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், மியன்மார், நேபாளம் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட 7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். பிம்ஸ்டெக் BIMSTEC நேற்றைய தினம்(28) ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.