48 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில்..!

48 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏலம் விடப்படவுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கமைய 91 நாட்களில் முதிர்ச்சியடையும் 18 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்களில் முதிர்ச்சியடையும் 12 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலம் விடப்படவுள்ளன.

அத்துடன், 364 நாட்களில் முதிர்ச்சியடையும் 18 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏலம் விடப்படவுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த திறைசேரி உண்டியல்கள் மீதான ஏல விற்பனை நடவடிக்கை நாளை 30 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *