மாணவன் மாயமானதை மறைத்த மூன்று மாணவர்கள் கைது!

பெல்மடுல்ல – கிரிதிஎல அணைக்கட்டில், நண்பர்களுடன் குளிக்கச்சென்ற 16 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவன் கடந்த 26ஆம் திகதி லெல்லுப்பிட்டிய பகுதிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளார்.

எனினும், அவர் வீடு திரும்பாமை தொடர்பில் அவரது பெற்றோர் கடந்த 27ஆம் திகதி இரத்தினபுரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று (திங்கட்கிழமை) குறித்த மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டமையினைத் தொடர்ந்து, பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் குறித்த மாணவன் மேலும் சில மாணவர்களுடன் நீர்த்தேக்கத்திற்கு நீராடச் சென்றமை தெரியவந்தது.

குறித்த மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், அவருடன் குளித்துக் கொண்டிருந்த ஏனைய மாணவர்கள் யாரிடமும் கூறாமல் அங்கிருந்து சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்தே மாணவன் காணாமல்போனமை குறித்து யாரிடமும் கூறாமல் அங்கிருந்து சென்ற மூன்று மாணவர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெல்மடுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *