கேரளாவில் பொதுவேலை நிறுத்தத்தில் பங்கேற்க அரச ஊழியர்களுக்கு தடை!

மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க அரசு ஊழியர்களுக்கு தடை விதித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அம்மாநில தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவில்,  உரிய காரணமின்றி பணியில் இல்லாத ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வேலை நிறுத்த நாட்களில் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட மாட்டாது எனவும்,  வேலைநிறுத்த நாட்களில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊழியர்கள் அலுவலகங்களுக்குச் செல்லும் வகையில் சேவையை உறுதி செய்யுமாறு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *