
உரம் இல்லை, எரிபொருள் இல்லை, கூலிக்கு வழங்க பணம் இல்லை, எவ்வாறு விவசாயம் செய்வது என யாழ் விவசாயி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் “சமூகம் மீடியா”வுக்கு கருத்து தெரிவிக்கையில்:
உரம் இல்லை, எரிபொருள் இல்லை, கூலிக்கு வழங்க பணம் இல்லை. இம்முறை படு நட்டத்தில் உள்ளோம். ஆயிரம் ரூபாவுக்கு வாங்கிய கிருமிநாசினிகள் இன்று 5 ஆயிரம் ரூபா. 10 ஆயிரம் ரூபாவுக்கு வாங்கிய அமோனியா உரம் இன்று 15 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்துக்கு மத்தியில் எவ்வாறு வாழ்க்கை நடாத்துவது.
இந்த இடம் பச்சை பசேலனே விவசாயம் செய்து காணப்பட்டது. இப்போது விவசாயிகள் எல்லாவற்றையும் கைவிட்டு வருகின்றனர். இவ்வளவு விலைக்கு எல்லாவற்றையும் வாங்கி விவசாயம் செய்தால், சந்தையில் தக்களிப் பழத்தை 30 ரூபாய்க்கு கேட்கிறார்கள்.
அறா விலை இது. எவ்வாறு விவசாயம் செய்வது. குழந்தைகளின் பால்மாவில் கைவைத்த அரசு விவசாயத்தில் கை வைத்து தவறு செய்து விட்டது.- என்றார்.