
யாழ்ப்பாண மீனவர் ஒருவர் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச் சாட்டுக்காக படகுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வேதாரண்யம் கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் வல்வெட்டிதுறை ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த சேர்ந்த , சாந்தரூபன் சிவலிங்கம் என்ற மீனவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்ட குறித்த மீனவர், கோடியக்கரை கடல் பகுதிக்கு அருகே ,வேதாரண்யம் கடலோர காவல் நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.