<!–
இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று(திங்கட்கிழமை) முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையின் உறுப்புரை 4 பணிக்குழு அறிக்கையின் கீழ் இலங்கை தொடர்பான 2021ம் ஆண்டுக்கான அறிக்கை கடந்த 25ஆம் திகதி வெளியிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து குறித்த அறிக்கையினை நாடாளுமன்றில் முன்வைக்குமாறு எதிர்கட்சி கட்சிகள் அண்மையில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.