13 ஆம் திருத்தச் சட்டத்தைத் தாண்டி புதிய அரசமைப்புக்கு வாய்ப்புக் குறைவு!

புதிய அர­ச­மைப்­பில் 13ஆம் திருத்­தச் சட்­டத்தைத் தாண்­டிய அதி­கா­ரப் பர­வ­லாக்­கம் இடம்­பெ­று­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் குறைவு. எனவே  புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க நட­வ­டிக்­கை­க­ளில் இணைந்து காலத்தை இழுத்­த­டிக்க அர­சுக்கு சந்­தர்ப்­பம் கொடுக்­க­ வேண்­டாம் என்று இந்­திய வெளி­வி­வ­கார அமைச்­சர் கலா­நிதி எஸ்.ஜெய்­சங்­கர்  தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னரை அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதன்போது அண்­மை­யில் ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பு எவ்­வாறு அமைந்­தது என்று ஜெய்­சங்­கர் வின­வி­னார். ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பு பற்றி இரா.சம்­பந்­தன் விளக்­க­ம­ளித்­தார். 13ஆம் திருத்­தத்தை கூட முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த அவர்­கள் தயங்­கு­கி­றார்­கள் என்று அவர் சுட்டிக்காட்­டி­னார்.

ஜனா­தி­ப­தி­யு­ட­னான பேச்சு விவ­கா­ரங்­களை விவ­ரிக்­கு­மாறு எம்.ஏ.சுமந்­தி­ரனைஇ சம்­பந்­தன் கேட்­டுக் கொண்டார். 5 விட­யங்­க­ளின் அடிப்­ப­டை­யில் பேச்சு நடை­பெற்­ற­தாக எம்.ஏ.சுமந்திரன் தெரி­வித்துஇ அந்த விட­யங்­களை விவ­ரித்­தார். அதில் 4 விட­யங்­கள் தொடர்­பில் நல்­லெண்­ணத்தை வெளிப்­ப­டுத்­தக் கோரி­யுள்­ள­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

அதன் பின்­னர் கருத்து தெரி­வித்த எஸ்.ஜெய்­சங்­கர்  புதிய அர­ச­மைப்­பில்இ 13 ஆம் திருத்­தத்தை தாண்டிய அதி­கா­ரப் பர­வ­லாக்­கம் இடம்­பெ­றும் என்று நம்­ப­வில்லை. இந்­தப் புதிய அர­ச­மைப்பு உருவாக்க நிகழ்ச்சி நிர­லில் நீங்­க­ளும் (கூட்­ட­மைப்பு) பங்­கேற்­றால் அரச தரப்பு அத­னைச் சொல்­லியே காலத்தை இழுத்­த­டிக்­கும். எனவே ஏனைய விவ­கா­ரங்­களை தீர்த்­துக் கொள்­ளுங்­கள். புதிய அரசமைப்புக்­காக காத்­தி­ருந்­தீர்­கள் என்­றால் அரசு நீண்­ட­கா­லத்தை அதற்­குள் முடக்கி எதை­யும் பெற்றுக்­கொள்­ளாத சூழல்­கூட உரு­வா­க­லாம் என்று ஆலோ­சனை வழங்­கி­னார்.

இதன்­போது  கருத்து தெரி­வித்த த.சித்­தார்த்­தன், புதிய அர­ச­மைப்பு உரு­வா­கு­மென நானும் நம்பவில்லை.  இந்­தச் சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி  தமிழ் அர­சி­யல் கைதி­கள் விடு­தலை, காணி விடுவிப்பு, புதிய ஆக்­கி­ர­மிப்பு பிர­தே­சங்­களை தடுப்­பது போன்­ற­வற்றை செய்ய எத்­த­னிக்­கி­றோம் என்றார். அது­தான் சரி­யான அணு­கு­முறை என எஸ்.ஜெய்­சங்­கர் தெரி­வித்­தார்.

செல்­வம் அடைக்­க­ல­நா­தன்,  13ஆம் திருத்­தத்தை வலி­யு­றுத்தி 6 தமிழ் கட்­சி­கள் கையெ­ழுத்­திட்டு கடிதமொன்றை அனுப்பி வைத்­துள்­ளோம். எனி­னும் இந்­தி­யத் தரப்­பி­லி­ருந்து போது­மான பிர­தி­ப­லிப்பு இருக்­க­வில்லை. அந்த முயற்­சிக்கு அங்­கீ­கா­ர­ம­ளிப்­பதை போல இந்­தியா செயற்­பட வேண்­டும். அப்­படி இந்­தியா செயற்­பட்­டால்­தான்  தமிழ்த் தரப்­புக்­கள் தொடர்ந்து ஒற்­று­மை­யா­கச் செயற்­பட வாய்ப்பு ஏற்படும்.  அத்­து­டன் அர­சுக்­கும் அழுத்­தம் ஏற்­ப­டும் எனத் தெரி­வித்­தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *