
இலங்கை அரசு மீது அழுத்தங்களை பிரயோகித்து ஒற்றையாட்சி அரசமைப்பு கொண்டு
வருவதைத் தடுத்து, தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசமைப்பைக் கொண்டுவருவதை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு
13 ஆரம்பப்புள்ளி கூட இல்லை
ஈழத் தமிழ்த் தேச மக்களின் நிலைப்பாட்டிலே 13ஆம் திருத்தமும் மாகாண சபைகளும் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்குரிய தீர்வு அல்ல என்பதுடன், அது தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகக் கூட அமையாது என்ற உண்மையை தொடர்ந்தும் நிரூபிக்கின்ற வகையிலேயே, கடந்த ஜனவரி 30ஆம் திகதி யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவிலும்இ கடந்த 13ஆம் திகதி வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுத் திடலிலும் மக்கள் எழுச்சிப் பேரணிகள் நடைபெற்றிருந்தன.
அதில், தமிழ் மக்கள் பல்லாயிரக் கணக்கில் அணிதிரண்டு 13 ஆம் திருத்தம் தீர்வுக்கான தொடக்கப்புள்ளியுமல்ல இறுதித் தீர்வுமல்ல என்பதனை ஆணித்தரமாக வெளிப்படுத்தியும் ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்கும் வேலைத் திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் அதேவேளை – தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்படுகின்ற – இணைந்த வடக்கு கிழக்கு தாயகத்தில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்ற சமஷ்டித் தீர்வை வலியுறுத்தியுள்ளதுடன் அத்தகைய தீர்வை அடைந்துகொள்ள இந்திய அரசும் ஏனைய நட்பு நாடுகளும் இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்கள்.
தனிநாடு மாத்திரம் கோரினர் என்பது பொய்
தமிழீழ விடுதலைப் புலிகள்இ தமிழ் மக்களது உரிமைக்காக போராடி வந்த காலப்பகுதியில்இ அவர்கள் நாட்டைப்பிரிக்காதஇ ஓர் சமஷ்டித் தீர்வுக்குத் தயாராக இருக்கவில்லை என்றும்இ தனிநாட்டுக்காக மட்டுமே பிடிவாதமாக செயற்படுகின்றார்கள் என்றும் அப்பட்டமான பொய்யைக் கூறியேஇ ஓர் இனவழிப்புப் போருக்கு இலங்கை அரசு சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்று அந்த இனவழிப்பின் மூலமாக உரிமைப் போராட்டத்தை மௌனிக்கச் செய்திருந்தார்கள்.
போர் முடிந்த பின்னர்இ ஒற்றையாட்சியை நிராகரித்துஇ இலங்கை சட்டத்தின் பிரகாரம் நாட்டைப்பிரிக்காமல் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமஷ்டித்தீர்வையே வலியுறுத்திஇ தமிழ்மக்கள் அனைத்துத் தேர்தல்களிலும் தமது ஆணையை வழங்கி வந்துள்ளார்கள்.
ஒற்றையாட்சி
இலங்கைக்கு நான்காவது புதிய அரசமைப்பைக் கொண்டுவருவதற்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளஇ இலங்கை அரசுஇ அந்த மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து புதிய அரசமைப்பை சமஷ்டி அரசமைப்பாக கொண்டுவராமல்இமாறாக ஒற்றையாட்சியாக கொண்டு வருவதற்கே நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.
இந்நிலையில் இந்தியாவின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு ஈழத்தமிழ்த் தேசம் உறுதியாக செயற்பட்டு வரும் நிலையில், ஈழத் தமிழ்த் தேசமக்களின் நலன்களை பேணும் வகையில்இ இலங்கை அரசு மீது அழுத்தங்களை பிரயோகித்து, ஒற்றையாட்சி அரசமைப்பைக் கொண்டுவருதனை தடுத்துஇ தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசமைப்பைக் கொண்டுவருவதனை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும்.
அந்த வகையில்இ ‘கிட்டுப்பூங்கா’ பிரகடனமானது தமிழ் மக்களின் அசைக்க முடியாத அரசியல் வேணவாவை மீண்டும் வெளிப்படுத்தும் ஆவணம் என்னும் வகையிலும், இந்த விடயங்களை இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு பயணம் செய்திருக்கும் இந்த சமயத்திலே, நாம் அவரை நேரில் சந்தித்து வெளிப்படுத்த காத்திருந்த நிலையில் எமக்கு அத்தகைய சந்தர்ப்பம் கிடைத்திருக்காத நிலையில்இ தமிழ் மக்களின் உண்மையான அரசியல் அபிலாஷைகளை இந்தக்கடிதம் ஊடாக கௌரவ இந்திய வெளிவிவகார அமைச்சர் ஊடாக இந்திய அரசின் மேலான கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகின்றோம்- என்றுள்ளது.