சமஷ்டி அரசமைப்பு உருவாகுவதை இந்திய அரசு உறதிப்படுத்த வேண்டும்!

இலங்கை அரசு மீது அழுத்­தங்­களை பிர­யோ­கித்து  ஒற்­றை­யாட்சி அர­ச­மைப்­பு கொண்­டு­
வ­ரு­வதைத் தடுத்து,  தமிழ்த் தேசம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட சமஷ்டி அர­ச­மைப்­பைக் கொண்­டு­வ­ரு­வதை இந்­தியா உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி,  இந்­திய வெளி­வி­வ­கார அமைச்­சர் கலா­நிதி எஸ்.ஜெய்­சங்­க­ருக்கு கடி­தம் அனுப்­பி­யுள்­ளது.

அந்­தக் கடி­தத்­தில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள விட­யங்­கள் வரு­மாறு

13 ஆரம்­பப்­புள்ளி கூட இல்லை
ஈழத் தமிழ்த் தேச மக்­க­ளின் நிலைப்­பாட்­டிலே 13ஆம் திருத்­த­மும் மாகாண சபை­க­ளும் தமிழ் மக்களுடைய இனப்­பி­ரச்­சி­னைக்­கு­ரிய தீர்வு அல்ல என்­ப­து­டன், அது தீர்­வுக்­கான ஆரம்­பப் புள்­ளி­யா­கக் கூட அமை­யாது என்ற உண்­மையை தொடர்ந்­தும் நிரூ­பிக்­கின்ற வகை­யி­லேயே,  கடந்த ஜன­வரி 30ஆம் திகதி யாழ்ப்­பா­ணம் கிட்­டுப் பூங்­கா­வி­லும்இ கடந்த 13ஆம் திகதி வவு­னியா தாண்­டிக்­கு­ளம் ஐய­னார் விளை­யாட்­டுத் திட­லி­லும் மக்­கள் எழுச்­சிப் பேர­ணி­கள் நடை­பெற்­றி­ருந்­தன.

அதில்,  தமிழ் மக்­கள் பல்­லா­யி­ரக் கணக்­கில் அணி­தி­ரண்டு 13 ஆம் திருத்­தம் தீர்­வுக்­கான தொடக்­கப்­புள்­ளி­யு­மல்ல  இறு­தித் தீர்­வு­மல்ல என்­ப­தனை ஆணித்­த­ர­மாக வெளிப்­ப­டுத்­தி­யும்  ஒற்­றை­யாட்­சிக்­குள் தமிழ் அர­சி­யலை முடக்­கும் வேலைத் திட்­டங்­க­ளுக்­கும் எதிர்ப்பு தெரி­விக்­கும் வகை­யி­லும்  அதே­வேளை – தமிழ்த் தேசம் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­கின்ற – இணைந்த வடக்கு கிழக்கு தாய­கத்­தில்  தமிழ் மக்­க­ளின் சுய­நிர்­ணய உரி­மையை அங்­கீ­க­ரிக்­கின்ற சமஷ்­டித் தீர்வை வலி­யு­றுத்­தி­யுள்­ள­து­டன்  அத்­த­கைய தீர்வை அடைந்­து­கொள்ள இந்­திய அர­சும் ஏனைய நட்பு நாடு­க­ளும் இலங்கை மீது அழுத்­தங்­க­ளைப் பிர­யோ­கிக்க வேண்­டு­மெ­ன­வும் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்­கள்.

தனி­நாடு மாத்­தி­ரம் கோரி­னர் என்­பது பொய்
தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள்இ தமிழ் மக்­க­ளது உரி­மைக்­காக போராடி வந்த காலப்­ப­கு­தி­யில்இ அவர்­கள் நாட்­டைப்­பி­ரிக்­காதஇ ஓர் சமஷ்­டித் தீர்­வுக்­குத் தயா­ராக இருக்­க­வில்லை என்­றும்இ தனி­நாட்­டுக்­காக மட்­டுமே பிடி­வா­த­மாக செயற்­ப­டு­கின்­றார்­கள் என்­றும் அப்­பட்­ட­மான பொய்­யைக் கூறியேஇ ஓர் இன­வ­ழிப்­புப் போருக்கு இலங்கை அரசு சர்­வ­தேச சமூ­கத்­தின் ஆத­ர­வைப் பெற்று அந்த இன­வ­ழிப்­பின் மூல­மாக உரி­மைப் போராட்­டத்தை மௌனிக்­கச் செய்­தி­ருந்­தார்­கள்.

போர் முடிந்த பின்­னர்இ ஒற்­றை­யாட்­சியை நிரா­க­ரித்துஇ இலங்கை சட்­டத்­தின் பிர­கா­ரம் நாட்­டைப்­பி­ரிக்­கா­மல் தமிழ்த் தேசம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஒரு சமஷ்­டித்­தீர்­வையே வலி­யு­றுத்திஇ தமிழ்­மக்­கள் அனைத்­துத் தேர்­தல்­க­ளி­லும் தமது ஆணையை வழங்கி வந்­துள்­ளார்­கள்.

ஒற்­றை­யாட்சி
இலங்­கைக்கு நான்­கா­வது புதிய அர­ச­மைப்­பைக் கொண்­டு­வ­ரு­வ­தற்­கான தயா­ரிப்­புப் பணி­க­ளில் ஈடு­பட்­டுள்ளஇ இலங்கை அரசுஇ அந்த மக்­கள் ஆணைக்கு மதிப்­ப­ளித்து புதிய அர­ச­மைப்பை சமஷ்டி அர­ச­மைப்­பாக கொண்­டு­வ­ரா­மல்இமாறாக ஒற்­றை­யாட்­சி­யாக கொண்டு வரு­வ­தற்கே நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றது.

இந்­நி­லை­யில் இந்­தி­யா­வின் நலன்­களை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு ஈழத்­த­மிழ்த் தேசம் உறு­தி­யாக செயற்­பட்டு வரும் நிலை­யில்,  ஈழத் தமிழ்த் தேச­மக்­க­ளின் நலன்­களை பேணும் வகை­யில்இ இலங்கை அரசு மீது அழுத்­தங்­களை பிர­யோ­கித்து,  ஒற்­றை­யாட்சி அர­ச­மைப்­பைக் கொண்­டு­வ­ரு­தனை தடுத்துஇ தமிழ்த் தேசம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட சமஷ்டி அர­ச­மைப்­பைக் கொண்­டு­வ­ரு­வ­தனை இந்­தியா உறு­திப்­ப­டுத்த வேண்­டும்.

அந்த வகை­யில்இ ‘கிட்­டுப்­பூங்கா’ பிர­க­ட­ன­மா­னது தமிழ் மக்­க­ளின் அசைக்க முடி­யாத அர­சி­யல் வேண­வாவை மீண்­டும் வெளிப்­ப­டுத்­தும் ஆவ­ணம் என்­னும் வகை­யி­லும், இந்த விட­யங்­களை இந்­தி­யா­வின் வெளி­வி­வ­கார அமைச்­சர் இலங்­கைக்கு பய­ணம் செய்­தி­ருக்­கும் இந்த சம­யத்­திலே, நாம் அவரை நேரில் சந்­தித்து வெளிப்­ப­டுத்த காத்­தி­ருந்த நிலை­யில் எமக்கு அத்­த­கைய சந்­தர்ப்­பம் கிடைத்­தி­ருக்­காத நிலை­யில்இ தமிழ் மக்­க­ளின் உண்­மை­யான அர­சி­யல் அபி­லா­ஷை­களை இந்­தக்­க­டி­தம் ஊடாக கௌரவ இந்­திய வெளி­வி­வ­கார அமைச்­சர் ஊடாக இந்­திய அர­சின் மேலான கவ­னத்­துக்­குக் கொண்­டு­வ­ர­வி­ரும்­பு­கின்­றோம்- என்­றுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *