யாழ்ப்பாணத்தின் 3 தீவுகளையும் சீனாவிடமிருந்து பிடுங்கியது இந்தியா!

யாழ்ப்­பா­ணத்­தின் 3 தீவு­க­ளில் புதுப்­பிக்­கத்­தக்க சக்தி மூல­மான மின் உற்­பத்தி தொடர்­பில் இந்­திய அரசுக்­கும், இலங்கை அர­சுக்­கும் இடை­யில் நேற்று இரவு ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது.

இந்­தத் தீவு­க­ளில் சீன அர­சின் உத­வி­யு­டன் அந்த நாட்டு நிறு­வ­னம் புதுப்­பிக்­கத்­தக்க சக்தி மூல­மான மின் உற்­பத்தி மேற்­கொள்­வ­தற்கு இலங்கை அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யி­ருந்­தது. இது தொடர்பில் இந்­தியா தனது பாது­காப்பை முன்­னி­றுத்தி இரா­ஜதந்­திரரீதி­யில் இலங்­கைக்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்­தது.

இந்த நிலை­யில் இலங்­கைக்­கான ஒரு பில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் கடன் வழங்­க­லின்­போது இந்­தியா பல நிபந்­த­னை­களை விதித்­தி­ருந்­தது. அதில் வடக்கு – கிழக்­கில் இந்­திய முத­லீட்­டுக்கு அனு­ம­திக்­கக் கோரி­யி­ருந்­தது.

இதற்கு அமை­வாக யாழ்ப்­பா­ணத்­தின் மூன்று தீவு­க­ளி­லும் மின் உற்­பத்­திக்­கான ஒப்­பந்­தம் இந்தியாவுடன் நேற்று இரவு கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது.

‘பொரு­ளா­தார மீட்சிஇ நமது அபி­வி­ருத்தி பங்­கு­டைமை, பரஸ்­பர பாது­காப்பு,மீன­வர்­கள் விவ­கா­ரம் மற்றும் சர்­வ­தேச ரீதி­யி­லான ஒன்­றி­ணைவு தொடர்­பாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. அத்­து­டன் முக்கியமான பல உடன்­ப­டிக்­கை­கள் கைச்­சாத்­தி­டப்­பட்ட நிகழ்­வு­க­ளி­லும் பங்­கேற்­றமை குறிப்­பி­டத் தக்­கது’ என்று பீரி­ஸுட­னான சந்­திப்­பின் பின்­னர் ஜெய்­சங்­கர் ருவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *