பெற்றோல் செற்றுக்கும் போனார் ஜெய்சங்கர்!

இலங்­கைக்கு வருகை தந்­துள்ள இந்­திய வெளி­வி­வ­கார அமைச்­சர் கலா­நிதி எஸ்.ஜெய்­சங்­கர், கொழும்பி­லுள்ள ஐ.ஓ.சி. எரி­பொ­ருள் நிரப்பு நிலை­ய­மொன்­றுக்கு நேற்­றுக்காலை பய­ணம் மேற்கொண்டார்.

‘கொழும்­பின் புற­ந­க­ரி­லுள்ள லங்கா ஐ.ஓ.சி. எரி­பொ­ருள் நிரப்­பு­நி­லை­யத்­துக்கு பய­ணம் மேற்கொள்ளப்பட்­டது.  முகா­மைத்­து­வப்­ப­ணிப்­பா­ளர் மனோஜ் குப்தா எரி­பொ­ருள் விநி­யோக நிலைமை குறித்து என்­னி­டம் தெரி­வித்­தார்.

500 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் இந்­தி­யக் கட­னு­தவி இலங்கை மக்­க­ளின் அன்­றாட வாழ்­வுக்கு உதவுகின்­றது’ என்று இந்­தப் பய­ணம் தொடர்­பில் ஜெய்­சங்­கர் தனது ருவிட்­டர் கணக்­கில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *