
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், கொழும்பிலுள்ள ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு நேற்றுக்காலை பயணம் மேற்கொண்டார்.
‘கொழும்பின் புறநகரிலுள்ள லங்கா ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்புநிலையத்துக்கு பயணம் மேற்கொள்ளப்பட்டது. முகாமைத்துவப்பணிப்பாளர் மனோஜ் குப்தா எரிபொருள் விநியோக நிலைமை குறித்து என்னிடம் தெரிவித்தார்.
500 மில்லியன் அமெரிக்க டொலர் இந்தியக் கடனுதவி இலங்கை மக்களின் அன்றாட வாழ்வுக்கு உதவுகின்றது’ என்று இந்தப் பயணம் தொடர்பில் ஜெய்சங்கர் தனது ருவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.