முதல் தடவையாக பேச்சுத் தொடர்பில் அரசும் தமிழர் தரப்பும் ஒரே கருத்து!

இலங்கை அரச தரப்­புக்­கும், தமி­ழர் தரப்­புக்­கும் இடையே நடை­பெற்ற பேச்­சுத் தொடர்­பில் முதல் தடவை­யாக இரு பகு­தி­யி­ன­ரும் ஒரே கருத்­தைத் தெரி­வித்­தமை இதுவே முதல்­முறை என்று இந்­திய வெளி­வி­வ­கார அமைச்­சர் கலா­நிதி எஸ்.ஜெய்­சங்­கர் தெரி­வித்­துள்­ளார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னரை நேற்று மாலை சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­ய­போதே அவர் இந்த விட­யத்தை தெரி­வித்­துள்­ளார்.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்­ச­வு­ட­னான பேச்­சுத் தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ரி­டம், இந்­திய வெளி­வி­வ­கார அமைச்­சர் எஸ்.ஜெய்­சங்­கர் கேள்வி எழுப்­பி­னார். பேச்­சின்­போது நடை­பெற்ற விட­யங்­களை கூட்­ட­மைப்­பி­னர் தெரி­வித்­த­னர்.

இதன்­போது கருத்து வெளி­யிட்ட ஜெய்­சங்­கர், ’நான் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்­ச­வைச் சந்­தித்த போதும் கூட்­ட­மைப்­பு­ட­னான சந்­திப்­பில் என்ன நடந்­தது? ’என்று கேட்­டேன். நீங்­கள் கூறி­ய­தையே அவரும் (ஜனா­தி­ப­தி­யும்) கூறி­னார்.

முதல் தட­வை­யாக தமி­ழர் தரப்­பும், அரச தரப்­பும் பேச்­சுத் தொடர்­பில் ஒரே கருத்­தைத் தெரி­வித்­துள்­ளன என்று கூட்­ட­மைப்­பி­னர் குறிப்­பிட்­டார் ஜெய்­சங்­கர். இந்­திய வெளி­வி­வ­கார அமைச்­சர் கலா­நிதி எஸ்.ஜெய்­சங்­கர், 1983ஆம் ஆண்­டி­லி­ருந்து இலங்கை விவ­கா­ரத்­து­டன் தொடர்­பு­டைய ஒரு­வர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *