
இலங்கை அரச தரப்புக்கும், தமிழர் தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுத் தொடர்பில் முதல் தடவையாக இரு பகுதியினரும் ஒரே கருத்தைத் தெரிவித்தமை இதுவே முதல்முறை என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடனான பேச்சுத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கேள்வி எழுப்பினார். பேச்சின்போது நடைபெற்ற விடயங்களை கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜெய்சங்கர், ’நான் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவைச் சந்தித்த போதும் கூட்டமைப்புடனான சந்திப்பில் என்ன நடந்தது? ’என்று கேட்டேன். நீங்கள் கூறியதையே அவரும் (ஜனாதிபதியும்) கூறினார்.
முதல் தடவையாக தமிழர் தரப்பும், அரச தரப்பும் பேச்சுத் தொடர்பில் ஒரே கருத்தைத் தெரிவித்துள்ளன என்று கூட்டமைப்பினர் குறிப்பிட்டார் ஜெய்சங்கர். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், 1983ஆம் ஆண்டிலிருந்து இலங்கை விவகாரத்துடன் தொடர்புடைய ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.