இந்திய மத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்று இரண்டாவது நாளாக பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.
இதில் வங்கி ஊழியர்களும் பங்கேற்கின்றனர். மின்சார சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், எல்ஐசி உள்ளிட்ட பொது நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது என்றும், பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்போது பேருந்துகள் இயக்கப்படுவதால் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் எந்தவித பிரச்சினையும் இன்றி பயணம் செய்து வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் விவசாய சங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதவேளை இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் ,அரசுக்கு எதிராக 150 இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
