பஸில்,மஹிந்த,கோத்தா,நாமல்; தனித்தனியே சந்தித்தார் ஜெய்சங்கர்!

இலங்­கைக்­குப் பய­ணம் மேற்­கொண்­டுள்ள இந்­திய வெளி­வி­வ­கார அமைச்­சர் கலா­நிதி எஸ்.ஜெய்சங்கர், நிதி அமைச்­சர் பஸில் ராஜ­பக்ச, பிர­த­மர் மஹிந்த ராஜ­பக்ச மற்­றும் ஜனா­தி­பதி கோத்தா­பய ராஜ­பக்ச மூவ­ரை­யும் தனித்­த­னியே நேற்­றுச் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­னார்.

நிதி அமைச்­சர் பஸி­லு­ட­னான சந்­திப்­புத் தொடர்­பில் ருவிட்­ட­ரில் ஜெய்­சங்­கர், பொரு­ளா­தார நிலை
தொடர்­பா­க­வும் இந்­தி­யா­வின் ஆத­ர­வான பதில் நட­வ­டிக்­கை­கள் குறித்­தும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. அய­லு­ற­வுக்கு முத­லி­டம் கொள்­கை­மூ­லம் நாம் தொடர்ந்து வழி­ந­டத்­தப்­ப­டு­வோம் என்று பதிவிட்டுள்ளார்.

பிர­த­மர் மஹிந்த ராஜ­பக்­ச­வு­ட­னான சந்­திப்­புத் தொடர்­பில், அன்பு நிறைந்த வர­வேற்­புக்­காக பிர­த­மர் மஹிந்த ராஜ­பக்­ச­வுக்கு நன்றி. எமது சந்­திப்­பை­ய­டுத்து முக்­கி­யத்­து­வம் வாய்ந்த நிகழ்­வு­க­ளும் இடம்பெற்­றி­ருந்­தன: இந்­தி­யா­வால் நிர்­மா­ணிக்­கப்­பட்ட யாழ்ப்­பா­ணக் கலா­சார நிலை­யம் மெய்­நி­கர் மார்க்­க­மூ­டாக திறந்து வைக்­கப்­பட்­டது. பௌத்த கலா­சா­ரம் மற்­றும் மர­பு­க­ளுக்­கான ஆத­ரவு மீதான உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­பட்ட நிகழ்­வில் பங்­கேற்­றேன்.
யாழ்ப்­பா­ணத்­தில் தற்­போது நடை­பெற்­று­வ­ரும் ஜெய்ப்­பூர் செயற்­கைக்­கால் பொருத்­தும் முகாம் மெய்நி­கர் மார்க்­க­மூ­டா­கப் பார்­வை­யிட்­டேன்’ என்று ருவிட்­ட­ரில் ஜெய்­சங்­கர் பதி­விட்­டுள்­ளார்.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்­ச­வு­ட­னான சந்­திப்­புத் தொடர்­பில், ’ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக்சவை சந்­தித்­த­தை­யிட்டு மகிழ்­வ­டை­கின்­றேன். நமது நெருக்­க­மான அய­லு­ற­வின் பல்­வேறு பரி­மா­ணங்­கள் குறித்து மீளாய்வு செய்­யப்­பட்­டது. இந்­தி­யா­வின் தொடர்ச்­சி­யான புரிந்­து­ணர்வு மற்­றும் ஒத்து­ழைப்பு குறித்­தும் அவ­ரி­டம் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது’ என்று ஜெய்­சங்­கர் ருவிட்­ட­ரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் கொழும்­பி­லுள்ள தொழில்­நுட்ப நிறு­வ­னத்­துக்கு இந்­திய வெளி­வி­வ­கார அமைச்­சர் எஸ்.ஜெய்சங்­கர் நேற்­றுச் சென்­றார். அதன்­போது அமைச்­சர் நாமல் ராஜ­பக்­ச­வும் அங்கு அவ­ரு­டன் இணைந்து கொண்­டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *