யாழ்ப்பாண கலாசார நிலையம் நேற்று திறப்பு, மக்கள் பாவனைக்கு அனுமதியில்லை!

யாழ்ப்பாண கலாசார நிலையம் நேற்று திறப்பு, மக்கள் பாவனைக்கு அனுமதியில்லை!

இலங்கை இந்திய நட்புறவின் சின்னமாக இந்திய அரசின் ஒன்று 1.6 பில்லியன் நிதியுதவியில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார நிலையம் நேற்று மெய்நிகர் வழியாக எளிமையான முறையில் திறந்துவைக்கப்பட்டது.

இலங்கை இந்திய நட்புறவின் சின்னமாக இந்திய அரசின் ஒன்று 1.6 பில்லியன் நிதியுதவியில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார நிலையம் நேற்று மெய்நிகர் வழியாக எளிமையான முறையில் திறந்துவைக்கப்பட்டது

இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் கொழும்பு அலரி மாளிகையிலிருந்து பிற்பகல் 1. 20 மணிக்கு மெய்நிகர் முறையில் திறந்து வைக்கப்பட்டது. அதேநேரம் யாழ்ப்பாணத்திலுள்ள கலாசார நிலையத்தில் அந்தக் காட்சி திரையிடப்பட்டது.

யாழ்ப்பாண கலாசார நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ் மாநகர முதல்வர் வி. மணிவண்ணன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி .வி. விக்னேஸ்வரன், சி.சிறீதரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்ட செயலர்கள், மதகுருமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண கலாசார நிலையம் வெகு விமரிசையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் இந்த ஆண்டு இறுதிக்குள் திறந்து வைக்கப்படும் என்றும் அதன் பின்னரே பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *