
கொழும்பு, மார்ச் 29
நாட்டில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் மற்றும் வாழ்க்கைச் சுமையினை கட்டுப்படுத்தாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்து தேர்தல் தொகுதிகளையும் இலக்காகக் கொண்டு ஒரே நேரத்தில் 150 எதிர்ப்பு போராட்டங்களை நடாத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி இப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.