
யாழ்ப்பாணம், மார்ச் 29
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இந்த மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை, மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வந்து, கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.