
இன விடுதலைக்காய் அறப்பணிபுரிந்த கலாநிதி இராயப்பு யோசேப்பு நினைவு தினத்தினை முன்னிட்டு தமிழ்த்தேசய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை மன்னார் நகரமண்டபத்தில் பி.ப 3.00 மணிக்கு நினைவுப் பேருரை நிகழ்வு இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னான்டோ ஆண்டகை பேரருட் கலாநி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை மற்றும் அருட்தந்தை ப.யோ ஜெபரட்ணம் அடிகளார் ஆகழியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
அரங்க அறிமுகவுரையினை அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் ஆற்றவுள்ளதுடன் ( மனித உரிமை செயற்பாட்டாளர்) தமிழ் தேசிய இருப்பில் அராயப்பு யோசப்பு ஆண்ணகையின் வகிபாகம் எனும் கருப்பொருளில் நினைவுப் பேருரையினை அரசறிவியல் துறைத்தலைவர் கே.ரி கணேசலிங்கம் இயம்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.