
பேசாலையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தலைமன்னார் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வீடொன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 885 மில்லி கிராம் எடையுள்ள ‘ஐஸ்’ மீட்கப்பட்டுள்ளதுடன் அதை வைத்திருந்த பேசாலையில் வசிக்கும் 27 வயதுடையவர் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
மேலும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ. 50 மில்லியன் என கூறப்படுகிறது. மேலும் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் குறித்த போதைப்பொருள் கடத்தல் இந்தியாவிலிருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்டதாகவும் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.