
தந்தை செல்வாவின் 124 வது பிறந்தநாள் நினைவுதின நிகழ்வு செல்வநாயகம் அறக்கட்டளையினரின் ஏற்பாட்டில் எதிர்வரும் 31.03.2022 வியாழக்கிழமை தந்தை செல்வா கலையரங்கம் யாழ் மத்திய கல்லுாரியில் காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பேராசிரியர் கலாநிதி சி. சற்குணராஜா யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர், சிறப்பு விருந்தினராக ஷரீன் அப்துள் சரூர், மனித உரிமை செயற்பாட்டார் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.