மீண்டும் குப்பைக் குளமாக மாறும் ஆரிய குளம்

யாழ்ப்பாணத்தின் முக்கிய குளமாக கருதப்படும் ஆரிய குளம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு,யாழ் மாநகர சபையின் நெறிப்படுத்தலில்,சீரமைக்கப்பட்டது.

அதற்கு முன்னர் குப்பைகளுடன் சீர் குலைந்து காணப்பட்ட குறித்த குளம் ,சீரமைப்பின் பின்னர் பலரையும் கவரக் கூடிய பொழுது போக்கு இடமாக காணப்பட்டது.

குளம் சுத்திகரிக்கப்பட்டு ,வர்ண மின் குமிழ்கள் ,ஓய்வு நடை பாதை,ஓய்வெடுக்கும் இருக்காய் ,நீர் விளையாட்டுகள் என அபிவிருத்தி செய்யப்பட்டது.

குளம் சீரமைக்கப்பட்டு சில மாதங்களே ஆகின்ற நிலையில் மீண்டும் குளம் பழைய நிலைக்கு திரும்பியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பாக குளத்துக்குள்ளே குப்பைகள் காணப்படுகின்றன ,சுற்றி உள்ள சூழல் சுத்தம் செய்யப்படவிலை,உள்ளிட்ட பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

பலரும் வந்து செல்லும் யாழின் சொத்தை உரியவர்கள் முறையாக பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *