
நாட்டின் பல பாகங்களில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட வாகன விபத்துக்களால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாதம்பை – கடுபொத்தை, தங்காலை, அலவ்வ மற்றும் நாரம்மல ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களிலே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 19 வயதான இளைஞர் ஒருவரும் அடங்குவார் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.