
நாட்டில் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை தனியார் போக்குவரத்து சேவையில் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படமாட்டாது என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அதேவேளை டீசல் வாங்குவதற்கு ரயில்வே துறைக்கு அதிக பணம் தேவைப்படுவதாகவும், சர்வதேச எரிபொருள் விநியோகஸ்தர்கள் மீதான தாக்குதல் காரணமாக எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்றும் கூறிய அவர் எவ்வளவு காலம் இருக்கும் விலைக்கு எரிபொருள் வழங்க முடியும் என்பதை நிதியமைச்சு தீர்மானிக்கும் எனவும் கூறினார்.
மேலும் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சி அடைந்தவுடன் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் கூறினார்.