
இலங்கையில் முதன்முறையாக கொலன்னாவையில் உள்ள அரச தொழிற்சாலை ஊடாக வாகன இலக்கத் தகடுகளை தயாரிக்க தீர்மானித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக வாகன இலக்கத் தகடுகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதன் மூலம், ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பெரும் தொகையான பணத்தை சேமிப்பதே இதன் மற்றுமொரு நோக்கமாகும்.
உள்ளூர் தனியார் நிறுவனம் மூலம் தற்போது நடைமுறைப்படுத்தப்படும், உள்ள வாகன இலக்கத் தகடுகளை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் 2024 ஆம் ஆண்டு காலாவதியாகவுள்ளதுடன், அதன் பின்னர் அரச தொழிற்சாலைகள் திணைக்களத்தினால் இந்த இலக்கத்தகடுகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படவுள்ளன.