வடக்கில் முடங்கும் போக்குவரத்துச் சேவை

சுதந்திர தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நேற்றைய தினம் (28) சம்பள உயர்வு தொடர்பான கோரிக்கையை முன்வைத்து, பணிப்புறக்கணிப்பு ஆரம்பமாகியுள்ளது .குறித்த போராட்டம் இன்றும் தொடர்ந்துள்ளது.

அந்தவகையில் இன்றைய தினம் வவுனியா சாலை ஊழியர்கள் காலை பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டனர்.

மேலும், முல்லைத்தீவு சாலை ஊழியர்களும் இன்று காலை 10.00 மணியிலிருந்து பணிப் புறக்கணிப்பினை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளாவிடின் வடக்கில் உள்ள ஏனைய போக்குவரத்து சபைகளும் இப்பணிப்புறக்கணிப்பினை நாளைய தினமும் தொடரலாம் என ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *