
பாணந்துறை – பின்வத்தை பகுதியுள்ள ஹோட்டல் ஒன்றின் கழிவு தொட்டியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதையறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தமது விசாரணைகளை ஆரம்பித்தனர்.
கழிவு தொட்டியில் இருந்ததாக கூறப்படும் சடலத்தை எடுப்பதற்கு நீதிமன்ற உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, சடலம் புதன்கிழமை (30) மீட்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதேவேளை, மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்