ஆலயங்களில் மர நடுகைத் திட்டம் இன்று ஆரம்பித்து வைப்பு!
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பசுமை இலங்கையின் எண்ணக்கருவுக்கு அமைய ஆலயங்களில் வீட்டுத் தோட்ட மர நடுகை நிகழ்வு இன்று (29-03-2022) தேசிய ரீதியில் இந்து கலாச்சார தினைக்களத்தின் ஏற்பாட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதனை கொழும்பு வம்பலபிட்டி வஜ்ஜீரா பிள்ளையார் ஆலய பிரதம குரு சச்சிதானந்த குருக்கள் மற்றும் சிவகுமார குருக்கள் ஆலய நிர்வாகி மற்றும் பிரதமரின் இந்துமத இணைப்பாளர் சிவ ஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபு சர்மா மற்றும் இந்து கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் பவானி முகுந்தன் ஆகியோர் கலந்து இந்த மர நடுகை வைபவத்தை ஆரம்பித்து வைத்தனர்.