டீசல் கையிருப்பில் இல்லை எனவே வரிசையில் நிற்க வேண்டாம் என அறிவிப்பு!

டீசலினை பெற்றுக்கொள்வதற்காக இன்றும்(புதன்கிழமை) நாளையும்  வரிசைகளில் நிற்க வேண்டாமென பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

37,500 மெட்ரிக் தொன் டீசலை கொண்டுவந்த கப்பலிலிருந்து திட்டமிட்டபடி டீசலை இறக்க முடியாமல்போன காரணத்தினால் டீசலை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்கு தடங்கலின்றி தொடர்ச்சியாக டீசல் விநியோகிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பெட்ரோல் விநியோகம் வழமைபோன்று தட்டுப்பாடு இன்றி முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *