மீண்டுமொரு தேசிய அரசு எதற்கு? கேள்வி எழுப்பினார் ஜனாதிபதி!

மீண்டுமொரு தேசிய அரசு எதற்கு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த நல்லாட்சி அரசாங்கம் காரணமாகவே நாடு இந்தளவு நெருக்கடியை சந்தித்துள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மீண்டுமொரு தேசிய அரசு எதற்கு என ஜனாதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மைப் பலத்துடன் உள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினை கவிழ்க்கச் சதி செய்வோர் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, அவர்களின் கனவு ஒருபோதும் நனவாகாது எனவும் கூறியுள்ளார்.

அத்துடன், நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை விரைவில் முடிவுக்கு வரும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *