பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்றும் மோடி!

<!–

பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்றும் மோடி! – Athavan News

இலங்கையில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) உரையாற்றவுள்ளார்.

இதன்போது கொவிட் தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார சவால்கள், அடுத்தக்கட்ட பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இதன்போது விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பல விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளதுடன், பொருளாதார ரீதியாக பல்வேறு உதவிகளை இலங்கைக்கு வழங்குவது குறித்தும் இணக்கம் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *