ரயில் கட்டணத்தை 58 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம்: திலும் அமுனுகம

கொழும்பு, மார்ச் 30

ரயில் கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் போது ரயில் கட்டணங்கள் 58 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் திலும் அமுனுகம கூறியதாவது,

இதன்படி புகையிரத போக்குவரத்தின் போது மூன்றாம் வகுப்புக்காக முதல் பத்து கிலோமீட்டருக்கு ஒரு ரூபா முப்பது சதமாக காணப்பட்ட ரயில் கட்டணம் இரண்டு ரூபாவாக அதிகரிக்கப்படும்.

இதேவேளை, கட்டணம் அதிகரிக்கப்படும் போது ரயில் கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்படும். நான்கு தடவைகள் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட போதும் ரயில் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.

.அதனையடுத்து இவ்வாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் புகையிரத கட்டண திருத்தத்திற்கான அனுமதியைப் பெற்று அதன் பின்னரே கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்றும், எவ்வாறிருப்பினும் பாரியளவில் கட்டணங்களை அதிகரிக்க எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *