ரயில் சாரதிகளின் தொழிற்சங்க போராட்டம் இடைநிறுத்தம்

நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில் கட்டணத்தை தன்னிச்சையாக திருத்தும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி நேற்று நள்ளிரவு முதல் மேலதிக நேர சேவையை கைவிடுவதற்கு இயந்திர சாரதிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

எவ்வாறாயினும் நேற்றிரவு போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *