நாடு திரும்பியவர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு: பொலிஸார் கைது

யாழ்ப்பாணம், மார்ச் 30

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர், வீட்டில் கஞ்சா செடி வளர்த்த குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பி , யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வசித்து வந்த நபரே கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் தனது வீட்டில் பூஞ்சாடியில் கஞ்சா செடி வளர்ப்பதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , அவரின் வீட்டினை நேற்றைய தினம் சுற்றிவளைத்த பொலிஸார் கைது செய்ததுடன், வீட்டில் வளர்த்த கஞ்சா செடியினை சான்று பொருளாக மீட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *