தமிழரின் பிரச்சினைக்கு இந்த ஆட்சியில் தீர்வாம்!

எனது ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண்பேன். அதன் ஒரு கட்டமாகவே தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளேன். இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார்.

அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, கைதிகள் விடுதலை உள்ளிட்ட 5 விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முதல்கட்டமாகப் பேசியுள்ளேன். இந்தப் பேச்சுக்குப் பல தரப்பிலிருந்தும் வரவேற்புக் கிடைத்துள்ளது. பேச்சுக்கள் தொடரும்.

தமிழ் மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் நான் தீர்வுகளைக் காண்பேன். இது எனது கடமை. புலம்பெயர் தமிழர்களுடனும் நான் பேசத் தயாராகவுள்ளேன். நாட்டின் அபிவிருத்திக்கு அவர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு செய்தியாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இலங்கை தற்போது கடும் பொருளாதா நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் இந்தியா பிற நாடுகளின் உதவிகளை இலங்கை எதிர்பார்த்துள்ளது. முக்கியமாக இந்தியாவின் உதவிகளை இலங்கை எதிர்பார்த்துள்ள நிலையில், தமிழ் மக்களுக்கான தீர்வு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *