
கோழி பண்ணைகளில் உயிரிழக்கும் கோழிகளை குறைந்த விலைக்கு விற்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்டத்தில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, குறைந்த விலைகளில் கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டால், அவற்றை கொள்வனவு செய்ய வேண்டாம் என நுகர்வோரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் பண்ணைகளில் வேலை செய்யும் பணியாளர்களைப் பயன்படுத்தி சில இடைத்தரகர்கள் இவ்வாறான செயல்களை செய்வதாகவும் கூறப்படுகின்றது.
குறிப்பாக பண்டிகைக் காலங்களில் இவ்வாறு உயிரிழக்கும் கோழிகளை வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பாமல், நுகர்வோரின் வீடுகளுக்கே நேரடியாக அனுப்பும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.