கிளிநொச்சி, மார்ச் 30
கிளிநொச்சியில் ரூ 76 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டு வருகின்ற புதிய பஸ் தரிப்பிடத்தின் இறுதிக்கட்ட நிர்மானப்பணிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செவ்வாய்க்கிழமை களநிலைமைகள் குறித்து நேரில் ஆராய்ந்தார்.
கிளிநொச்சி மக்கள் போக்குவரத்துக்காக பெரும் அசௌகரியங்களை சந்தித்து வந்த நிலையில் மக்களின் பாவனைக்காக அரச நிதி ஒதுக்கீட்டின் கீழ் புதிய பஸ் தரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்த பஸ் தரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை அவதானித்த டக்ளஸ் தேவானந்தா குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளதுடன் விரைவில் மக்கள் பாவனைக்கு பஸ் தரிப்பிடத்தினை வழங்குமாறு அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.