
எதிர்வரும் மேதின கூட்டத்தை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறீ லங்கா சுதந்திரக்கட்சி, விமல் வீரவம்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி மற்றும் உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய உட்பட 11 கட்சிகள் இணைந்து கொழும்பில் மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.
நேற்றையதினம் அரச பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் குறித்த மேதினக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட ஏனைய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.