யாழ்ப்பாணம் சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில், மகளிர் தின நிகழ்வுகள் இன்று காலை யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் முதன்மை விருந்தினராக தொழில் துறை திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் கலந்து சிறப்பித்துள்ளார்.
மேலும் சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி இ.சுரேந்திரகுமரன்,கெளரவ விருந்தினராக யாழ் பல்கலைக் கழக சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி கோசலை மதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

