எங்கும் மக்கள் வரிசை; சமல் ராஜபக்ச கவலை!

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் கருத்துத் தெரிவித்த நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ச,

நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ஜனாதிபதியோ பிரதமரோ அல்லது நிதியமைச்சரோ பதவி விலகுவதனூடாக தீரப்போவதில்லை எனவும் அரசிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு விரைந்து தீர்வு காணவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ‘என்னால் இன்னும் கிராமத்துக்குச் செல்ல முடிகின்ற போதிலும் மக்கள் எண்ணெய் மற்றும் எரிவாயுக்களை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நிற்பதைக் கண்டு தான் வருத்தமடைந்துள்தாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *