
வெலிமடை – கெப்பெட்டிபொல வீடமைப்புத் திட்டத்தில் உள்ள வீடொன்று தீப்பற்றி எரிந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் வீட்டிலுள்ள ஜெனரேட்டர் இயங்காத நிலையில் காணப்பட்டுள்ளது.
இதையடுத்து, குடியிருப்பாளர்கள் மெழுகுவர்த்தியை எடுத்து கொண்டு சோதனை செய்ய முற்பட்டுள்ளனர் .
இதன் போது, ஜெனரேட்டருக்கு அருகில் இருந்த பெற்றோல் போத்தல் தீப்பிடித்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக காயமடைந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரும் வெலிமடை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.