
கொழும்பு, மார்ச் 30
கொழும்பு – புறக்கோட்டை பகுதியிலுள்ள தங்க விற்பனை மத்திய நிலையத்திற்கு (கோலட் சென்டர் ) அருகில் தீ பரவியுள்ளது.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவின் மூன்று வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. குப்பை வீசப்பட்டிருக்கும் பகுதியிலேயே தீ பரவியுள்ளதாக தெரிவித்த தீயணைப்பு பிரிவு, தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டது.