
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 50 மில்லியன் ரூபா பெறுமதியான 4.9kg ‘ஐஸ்’ போதைப்பொருளை வைத்திருந்த இருவரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் 41 மற்றும் 43 வயதுடைய மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடமிருந்து ஒரு டிரக் வாகனம் மற்றும் இரண்டு மொபைல் போன்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.