பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்பவர்கள் மக்களுக்கு தேவையற்றவர்கள்! வியாழேந்திரன்

பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்பவர்கள் மக்களுக்கு தேவையற்றவர்கள் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று பகுதியில் புதிய பாடசாலையொன்று ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
போரதீவுப்பற்று பகுதியின் மிகவும் பின்தங்கிய பகுதி மாணவர்களின் நலநன கருத்தில் கொண்டு இந்த பாடசாலை அமைக்கப்பட்டு ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் முன்மொழிவுகளுக்கு அமைவாக இந்த பாடசாலை அமைக்கப்பட்டுள்ளது.

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதியான சுரவணையடியூற்று பகுதியில் உள்ள மாணவர்கள் நீண்டகாலமான நீண்டதூரம் பயணித்து கல்வி பெறவேண்டிய நிலை காரணமாக இப்பகுதி மக்கள் தொடர்ச்சியான கோரிக்கையினை முன்வைத்துவந்தனர்.

கடந்த 10வருடத்திற்கு மேலாக இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துவந்த நிலையில் இன்று இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த பாடசாலையின் ஆரம்ப நிகழ்வு கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி இராகுலநாயகி,பட்டிப்பு கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் மகேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *