தேவை ஏற்படின் ரணிலிடம் ஆலோசனை பெற தயார்: ஹர்ஷ டி சில்வா

கொழும்பு, மார்ச் 30

ரணில் விக்கிரமசிங்கவிடம் ஆலோசனை பெறவேண்டிய தேவை ஏற்படின், அதனை நாம் பெறுவோம். அதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் ஹர்ஷ டி சில்வா கூறியதாவது,

ரணில் விக்கிரமசிங்கதான் என்னை அரசியலுக்கு கொண்டுவந்தார்”. எனினும், அரசியலில் விளையாடுவதற்கு நான் தயார் இல்லை. ரணில் விக்கிரமசிங்கவுக்கு 72 வயதாகின்றது. அரசியலில் சிறந்த அனுபவம் உள்ளது.

பொருளாதாரம் பற்றியும் சிறந்த தெளிவு உள்ளது. எனவே, தேவையேற்படின் அவரிடம் ஆலோசனை பெறமுடியும். எம்மிடையே அரசியல் ரீதியிலான பிரச்சினைதான் உள்ளது. மாறாக தனிப்பட்ட பிரச்சினை கிடையாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *